மாணவர்களின் கொள்கைகள் தேச விரோதமாக மாறக்கூடாது- பிரதமர் மோடி

0 986
மாணவர்களின் கொள்கைகள் தேச விரோதமாக மாறக்கூடாது- பிரதமர் மோடி

கொள்கையளவில் வேறுபாடு இருந்தாலும், அது தேசவிரோதமாக மாறுவதை ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி மாணவர்களிடம் அறிவுறுத்தினார்.

ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையைத் திறந்து வைத்து காணொலி வாயிலாக உரை நிகழ்த்திய பிரதமர் ஒவ்வொருவருக்கும் தமது கொள்கையே உயர்ந்தது என்ற போதும் அது நாட்டு நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுதந்திரப் போராட்டத்தின் போதும் அவசர நிலையின் போதும் மக்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் ஒன்று பட்டு நாட்டு நலனுக்காக போராடியதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments