திருப்பதி-திருமலை இடையே சுற்றுச்சூழலை பாதிக்காத பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் - அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவிப்பு
திருப்பதி -திருமலை இடையே சுற்றுச்சூழலை பாதிக்காத பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் பேசிய அவர், பேட்டரி பேருந்துகள் திருப்பதி - திருமலை இடையே மலைப்பாதையில் கடந்த 2 நாட்களாக ஒரு நாளைக்கு மூன்று முறை சோதனை முறையில் இயக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்த பேருந்துக்கு ஒருமுறை சார்ஜிங் செய்தால் சுமார் 170 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம் என்றும் கூறினார்.
Comments