வாரணாசியின் மேம்பாட்டுக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

0 991
வாரணாசியின் மேம்பாட்டுக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

காணொலி மூலம் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

614 கோடி ரூபாய் செலவில் நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், பயனாளிகளுடனும் பிரதமர் உரையாடுகிறார்.

சாரநாத் ஒலி-ஒளி காட்சி, ராம் நகரில் உள்ள மேம்படுத்தப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை, கழிவுநீர் மேலாண்மை தொடர்பான பணிகள்  உள்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments