சிறை விசாரணை கைதி செல்வமுருகன் திடீர் மரணம்; தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

0 1509
சிறை விசாரணை கைதி செல்வமுருகன் திடீர் மரணம்; தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

விருத்தாச்சலம் கிளை சிறை விசாரணை கைதி செல்வமுருகன் மரணம் அடைந்தது குறித்து தீவிரமாக விசாரித்து, காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், செல்வமுருகன் , நெய்வேலி நகரக் காவல் நிலையப் போலீசாரின் சித்ரவதைக்குப் பலியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார். சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலைக்குப் பிறகு, உயர்நீதிமன்றமே எச்சரித்தும், தமிழகக் காவல் துறைத் தலைவர் சுற்றறிக்கை அனுப்பியும்,இதுபோன்ற சம்பவங்கள் தொடருவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments