வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விசாரணைக்கு ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜர்

0 1620
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விசாரணைக்கு ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜர்

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விசாரணைக்கு திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜரானார்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த கருத்தரங்கில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜரான ஆர்எஸ் பாரதியிடம், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments