சீன அதிபருடன், பிரதமர் மோடி இந்த மாதத்தில் மட்டும் மூன்று கூட்டங்களில் பங்கேற்கிறார்

0 4414
நடப்பு மாதத்தில் சீன அதிபரை, பிரதமர் மோடி மூன்று வெவ்வேறு கூட்டங்களில் சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது

நடப்பு மாதத்தில் சீன அதிபரை, பிரதமர் மோடி மூன்று வெவ்வேறு கூட்டங்களில் சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.

எல்லை பிரச்சனையை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் மாநாடு வருகிற 10-ஆம் தேதியும், பிரிக்ஸ் மாநாடு 17-ஆம் தேதியும், ஜி-20 மாநாடு 21,22 ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது.

இதில் முதல் இரு மாநாடுகளை ரஷ்யாவும், மூன்றாவது மாநாட்டை சவுதி அரேபியாவும் நடத்துகின்றன. இந்த மாநாடுகளில் இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் சி ஜின் பிங்கும் பங்கேற்கிறார்கள். காணொலி மூலம் நடைபெறும் இந்த மாநாடுகளின் போது இரு நாட்டு அதிபர்களும் ஒருவரை, ஒருவர் காணும் வாய்ப்பு உள்ளது என்றும், ஆனால் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிலை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments