இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியது

0 1191
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 45,230 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 496 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை  82 லட்சத்து 29 ஆயிரத்து 313ஆகவும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 607ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து  53,285 பேர் குணமானதால், குணமானோர் எண்ணிக்கை  75 லட்சத்து 44 ஆயிரத்து 798ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,550 குறைந்ததால், அந்த எண்ணிக்கை 5 லட்சத்து 61 ஆயிரத்து 908ஆக சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments