கொரோனா தடை உத்தரவை மீறி இரவு நேரங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் மதுவிற்பனை, நடனநிகழ்ச்சி - போலீசார் அதிரடி.!

0 3984
கொரோனா தடை உத்தரவை மீறி இரவு நேரங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் மதுவிற்பனை, நடனநிகழ்ச்சி - போலீசார் அதிரடி.!

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில்   கொரோனா தடை உத்தரவை மீறி இரவு நேரங்களில் மது விற்பனை  மற்றும் நடன  நிகழ்ச்சி நடத்தியதாக மதுபான பார் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

மாங்க்ஸ் பிளேட் என்ற விடுதியில் ரகசியத் தகவலின்பேரில் போலீசார் நடத்திய சோதனையில், கொரோனா தடை உத்தரவை மீறி மது விற்பனை, குறிப்பிட்ட தொகையை வசூலித்து இளம்பெண்கள், இளைஞர்களின் நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பார் மேலாளரைக் கைது செய்த போலீஸ், அங்கிருந்த மதுபாட்டில்கள், இசைகருவிகளை  பறிமுதல் செய்தனர். மேலும் மதுவிருந்தில் பங்கேற்ற   20 இளைஞர்கள், இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments