கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து இன்றுடன் 64 ஆண்டுகள் நிறைவு

0 5321

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து 64 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதற்காக போராடிய, மார்ஷல் நேசமணியின் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழகத்துடன் இணைந்தது. இதற்காக தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட மார்ஷல் நேசமணிக்கு நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநாளை நினைவுகூறும் வகையில், மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments