டெல்லியில் பொதுப் பேருந்துகளில் அனைத்து இருக்கைகளிலும் ஆட்களை ஏற்ற அனுமதி

0 1358
டெல்லியில் பொதுப் பேருந்துகளில் அனைத்து இருக்கைகளிலும் ஆட்களை ஏற்ற அனுமதி

டெல்லியில் பொதுப் பேருந்துகளில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகளை ஏற்றிச் செல்ல இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழலில் டெல்லியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக 40 இருக்கைகள் கொண்ட பொதுப் பேருந்துகளில் அதிகப்பட்சமாக 20 பேர் வரை மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இன்று முதல் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதால் பொதுப் பேருந்துகளில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பியபின் பயணிகள் நின்றுகொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு தொடர்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments