சி.ஏ. தேர்வுகள் நவம்பரில் திட்டமிட்டபடி தொடங்கும் என அறிவிப்பு

0 2273
சி.ஏ. தேர்வுகள் நவம்பரில் திட்டமிட்டபடி தொடங்கும் என அறிவிப்பு

சி.ஏ. தேர்வுகள் தள்ளிவைக்கப்படவில்லை என்றும், நவம்பர் மாதத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டுக்கான சி.ஏ. தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. பிறகு பீகார் தேர்தல் காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டன. தற்போது சி.ஏ. தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதனிடையே அடுத்த ஆண்டு ஜனவரி வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் வெளியான தகவலை இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு மறுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments