அடுத்த மாதம் 7 ஆம் தேதி 10 செயற்கை கோள்களை விண்ணில் ஏவுகிறது இந்திய விண்வெளி ஆய்வு மையம்

0 1962
அடுத்த மாதம் 7 ஆம் தேதி 10 செயற்கை கோள்களை விண்ணில் ஏவுகிறது இந்திய விண்வெளி ஆய்வு மையம்

வருகிற நவம்பர் 7-ஆம் தேதி 10 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்சி மையம் கூறியுள்ளது.

PSLV-C49 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து நவம்பர் 7-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோவின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் EOS-01 என்ற செயற்கைக்கோள் தவிர மற்ற 9 செயற்கைக்கோள்களும் வெளிநாடுகளை சேர்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண்மை, வனம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவைகளுக்கு பயனளிக்கும் EOS-01 செயற்கைக்கோள் செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments