திருமணம் செய்ய மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் இளம் நடிகை மால்வி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதி

0 3894
திருமணம் செய்ய மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் இளம் நடிகை மால்வி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதி

திருமணம் செய்ய மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் இளம் நடிகை மால்வி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தி, தெலுங்கு, தமிழ் மொழித் திரைப்படங்களில் மால்வி மல்கோத்ரா நடித்துள்ளார். தமிழில் ஒண்டிக்கு ஒண்டி என்ற திரைபடத்தில் கதாநாயகியாக அவர் நடித்துள்ளார்.

யோகேஷ்குமார் மகிபால் சிங் என்பவரிடம் நீண்டநாள் நட்பாக பழகிவந்த நிலையில் அண்மையில் பேச்சை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மும்பையின் வெர்சோவா பகுதியில் நேற்று இரவு அவரிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும், இதை ஏற்க மறுத்ததால் யோகேஷ்குமார் கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

புகாரின்பேரில் கொலை முயற்சி, பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து யோகேஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments