தான் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி - முன்னாள் கேப்டன் கபில் தேவ்

0 3848
தான் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி - முன்னாள் கேப்டன் கபில் தேவ்

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தான் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், நல்ல முறையில் தனது உடல்நிலை முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 61 வயதான கபில் தேவ் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, நேற்று டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments