நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தை 22 மாதங்களில் கட்டி முடிக்க நடவடிக்கை

0 2570
நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டிடம் 22 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று மக்களவை செயலாளர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டிடம் 22 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று மக்களவை செயலாளர் கூறியுள்ளார்.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கட்டுமான பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முடியுமென கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எம்.பிக்கும் நவீன வசதிகளுடன் கூடிய தனி அலுவலகம், நூலகம், கூட்ட அரங்குகள், உணவகம், வாகன நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும், கட்டுமான பணிகளால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகளால் காற்று, ஒலி மாசு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments