அரசு அலுவலங்களில் பிரதமர் மோடி புகைப்படம்! - பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம்

0 5507

புதுக்கோட்டையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள்  பாரதிய ஜனதா கட்சியினர் புகைப்படங்களுடன் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனாலும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, இன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மோடியின் புகைப்படங்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள்ளே சென்றனர். அவர்களிடத்தில் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் பாஜக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசு ஆணையின் படி பாரத பிரதமரின் புகைப்படத்தை அனைத்து அரசு அலுவலகத்திலும் வைக்க வேண்டும் என அரசு அதிகாரிகளிடத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் வலியுறுத்தினர்.  மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து விவாதித்து,  இரண்டு நாட்களில் முடிவை தெரிவிப்பதாக கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி உறுதி கூறியதையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் கலைந்து சென்றனர்.

இன்னும் இரண்டு நாட்களில் பிரதமரின் புகைப்படத்தை வைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments