தனக்குத் தராமல் காய்கறியை வீட்டுக்கு கொண்டு சென்றவரை தாக்கிய காளை

0 4138
தனக்குத் தராமல் காய்கறியை வீட்டுக்கு கொண்டு சென்றவரை தாக்கிய காளை

ஆந்திராவில் தனக்கு காய்கறி தராதவரை காளை ஒன்று முட்டித் தூக்கி வீசியது.

கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் சாலையோர வியாபாரியிடம் காய்கறி வாங்கிய ஒருவர் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

இதனைக் கண்ட காளை ஒன்று தனக்குத்தான் காய்கறி கிடைக்குமென அவரைப் பின் தொடர்ந்தது. ஆனால் அவர் மாட்டைக் கவனிக்காமல் சென்றதால், திடீரென அந்தக் காளை அவரை முட்டித் தூக்கி வீசியது.

இதில் தெருவின் நடுவில் தோண்டப்பட்டிருந்த பாதாளச் சாக்கடை குழியில் விழுந்த அவர் காயமடைந்தார். அவர் வைத்திருந்த காய்கறிகள் சாலையில் விழுந்ததைக் கண்ட அந்த மாடு அவற்றை சாவகாசமாக சாப்பிட்டுச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments