விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கான பணத்தை தாமதமின்றி வழங்க முகவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

0 1107
விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கான பணத்தை தாமதமின்றி வழங்க முகவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கான பணத்தை நிறுவனங்களிடம் இருந்து பெற்றவுடன், தாமதமின்றி பயணிகளுக்கு வழங்கிடுமாறு முகவர்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் அறிவிப்பில், கொரோனா சமயத்தில் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை அளிக்காமல், எதிர்காலப் பயன்பாட்டிற்கான சலுகைகளை வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மீறிச் செயல்படும் முகவர்கள் மீது, கட்டணத்தை திரும்ப வழங்கக் கூறிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்ததாக, நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments