டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் -சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

0 1379
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி 9 அணிகள் இடையே நடந்து வருகிறது. குறிப்பிட்ட டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் முடிவுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு அணிகளும் 6 தொடர்களில் விளையாட வேண்டும். கொரோனா அச்சத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டன.

ஆனால் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் இறுதிப்போட்டி நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments