முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு குடியரசுத்தலைவர் இரங்கல்

0 1594
முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு குடியரசுத்தலைவர் இரங்கல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், முதலமைச்சரின் தாயார் மறைந்த செய்தி அறிந்து தாம் மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அவரை இழந்து வாடும் முதலமைச்சருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments