நவம்பர் 1 - மெரினா திறப்பு?

0 2485
நவம்பர் 1 - மெரினா திறப்பு?

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல நவம்பர் முதல் வாரத்தில் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரையை சுத்தபடுத்துவது தொடர்பான வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தபோது, அக்கடற்கரையை நவம்பர் 1 முதல் திறக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராயும்படி நீதிபதிகள் கூறினர்.

மேலும் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அழகான சுத்தமான கடற்கரையாக மாற்ற வேண்டும் என்றும், மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்று மீண்டும் மாநகராட்சி ஆணையரையும், காவல் ஆணையரையும் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments