அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவு நிறுத்திவைப்பு - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

0 7134
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவு நிறுத்திவைப்பு - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆபிரஹாம் வெளியிட்டு உள்ள செய்தியில், பார் கவுன்சில் அறிவுறுத்தலின் படி, சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள சட்டக் கல்லூரி களில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு  உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரியர் மாணவர்களுக்கு இண்டர்னல் மற்றும் முந்தைய தேர்வுகளின்அடிப்படையில் தேர்ச்சி வழங்கும் விவகாரத்துக்கு அகில இந்திய பார் கவுன்சில் பொதுக்குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் ஆபிரஹாம் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments