அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சகத்துக்கு துணைவேந்தர் சுரப்பா கடிதம்

0 1713

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரத்தில் நிதி பங்களிப்பு, 69% இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறது.

இதற்காக அமைச்சர்கள், அதிகாரிகளை கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் நடவடிக்கைகளும் கொரோனா காரணமாக தடைபட்டது. இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிக்கும் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா எழுதியுள்ள கடிதத்தில், கல்லூரிகளின் இணைப்புக் கட்டணம், தேர்வு கட்டணம், செமஸ்டர் கட்டணம் ஆகியவற்றை சேர்த்து ஆண்டுக்கு 314 கோடி ரூபாய் என 5 ஆண்டுக்கு 1,570 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என்றும், தாமதிக்காமல் உடனடியாக சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments