சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைப்பு..!

0 8866
சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைப்பு..!

சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட சத்துணவு திட்டத்துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை, தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான, நேர்காணல் தேர்வு பணிகளில், அதிக எண்ணிக்கையில், விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா தொற்று பரவல் நீங்காத நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைப்பதாக, தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments