டி.எச்.எப்.எல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

0 1757
டி.எச்.எப்.எல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் என்ற தனியார் வீட்டுக்கடன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகி, கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில் ராஜேஷ் வத்வான் மற்றும் அவரது சகோதரர் தீரஜ் ராஜேஷ் வத்வான் உள்பட 11 பேர், முதலீட்டாளர்களுக்கு போலியான சலுகைகளை அறிவித்து தமிழகத்தில் 218 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்தனர் என்பது புகாராகும்.

இதுதவிர, நாடு முழுவதும் பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய, இவர்கள் இருவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் மும்பை சென்று சிறையில் இருந்த இருவரையும் நீதிமன்ற அனுமதி பெற்று சென்னைக்கு அழைத்து வந்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments