பள்ளிகளைத் திறப்பதை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம்-அமைச்சர் செங்கோட்டையன்

0 6822

பள்ளிகளைத் திறப்பதை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்றும், பள்ளிகளைத் திறப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளதாகவும், பள்ளிகளை ஆய்வு செய்வதில் சுணக்கம் கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு செங்கோட்டையன் அறிவுறுத்தினார். 

ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்குமாறும், மாணவர்கள் பார்வைத் திறன், கண் பார்வையையும் அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments