பிரியங்கா ஆடையை இழுத்த விவகாரத்தில் உ.பி. போலீசார் உரிய விளக்கம் அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

0 2519
பிரியங்கா ஆடையை இழுத்த விவகாரத்தில் உ.பி. போலீசார் உரிய விளக்கம் அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

பிரியங்கா ஆடையை இழுத்த விவகாரத்தில் உத்தரப்பிரதேச போலீஸ் உரிய விளக்கம் அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் பிரியங்காவிடம் போலீஸ்காரர் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது என்றும் உணர்வற்ற இந்த நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையின் தீவிர தன்மையை உணர்ந்த ஆணையத்தின் தலைவர் ஷர்மரேகா இதுபற்றி உத்தரப்பிரதேச போலீஸ் உடனடியாக விளக்கம் அளிக்க வலியுறுத்தி உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments