போதை பொருள் விவகாரத்தில் ஒட்டுமொத்த சினிமா துறை மீதும் குற்றம் சுமத்த வேண்டாம் - அக்சய் குமார்

0 1910
போதைப்பொருள் விவகாரத்தில் எல்லா நடிகர்களும் சம்பந்தப்பட்டு உள்ளதாக கருதக்கூடாது என்று அக் ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விவகாரத்தில் எல்லா நடிகர்களும் சம்பந்தப்பட்டு உள்ளதாக கருதக்கூடாது என்று அக் ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள காட்சி பதிவில்,சுஷாந்த் சிங் மரணத்துக்கு பிறகு பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

சினிமா துறையில் இருக்கும் சில குறைகளும் வெளியாகி உள்ளது, வலியை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தி பட உலகில் போதைப் பொருள் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை என்றும்,  அதேநேரம் எல்லா நடிகர்களும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று கருதக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த சினிமா துறையையும் போதை பொருளில் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments