அக்டோபர் 31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

0 3564
அக்டோபர் 31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அக்டோபர் 31ம் தேதி வரை, மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரையை சுத்தம் செய்தல், மீன் விற்பனையை முறைப்படுத்துதல் தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு எப்போது திறக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரடங்கு நீட்டிப்பால், அக்டோபர் 31ம் தேதி வரை பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகளை திறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை சுட்டிக்காட்டி, அதுவரை மெரினா கடற்கரையிலும் பொதுமக்களுக்கு  அனுமதியில்லை என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY