பாம்பன் தூக்கு பாலத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: பாலத்தை சரிசெய்யும் பணிகள் 2-வது நாளாக தொடர்கிறது

0 2669
பாம்பன் தூக்கு பாலத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: பாலத்தை சரிசெய்யும் பணிகள் 2-வது நாளாக தொடர்கிறது

இராமேஸ்வரம் அருகே பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் 'சேது எக்ஸ்பிரஸ்' நேற்று இரவு புறப்படுவதற்கு முன்பாக பாம்பன் தூக்கு பாலத்தின் உறுதித்தன்மை வழக்கம்போல சோதிக்கப்பட்டது.

இதையடுத்து, பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்ததையடுத்து, 'சேது எக்ஸ்பிரஸ்' பயணிகளின்றி பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து, மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே முதன்மை பொறியாளர் குழுவினர் பாலத்தை சீரமைக்கும் பணிகளில் தொடர்ந்து 2 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments