ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினரின் வாக்குமூலத்தை பதிவு செய்தது சிறப்பு புலனாய்வுக் குழு

0 1185
ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினரின் வாக்குமூலத்தை பதிவு செய்தது சிறப்பு புலனாய்வுக் குழு

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 19 வயது இளம்பெண்ணின் குடும்பத்தினரின் வாக்குமூலத்தை சிறப்பு புலனாய்வு குழு பதிவு செய்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் மாநில அரசை கண்டித்து  எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் மாநில அரசு நேற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. ஹத்ராஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , துணை கண்காணிப்பாளர், மற்றும் சில காவல்துறை அதிகாரிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு, இளம்பெண்ணின் குடும்பத்தினரை இன்று காலை சந்தித்து வாக்குமூலத்தை பதிவு செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments