பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கடற்படை கேப்டன் திடீர் விபத்தில் சிக்கி பலி

0 2932
பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கடற்படை கேப்டன் திடீர் விபத்தில் சிக்கி பலி

கர்நாடக மாநிலம் கார்வார் கடற்கரையில் பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை கேப்டன், திடீர் விபத்தில் சிக்கி பலியானது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மதுசூதன் ரெட்டி, தனது குடும்பத்துடன் கார்வார் துறைமுகத்துக்கு சென்ற நிலையில், அங்கு பயிற்சியாளர் உதவியுடன் பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கிளைடரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் கடலில் விழுந்தது.
பாராகிளைடரில் இருந்து விழுந்த இருவரையும், அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்டுள்ளனர்.

பயிற்சியாளர் காயமேதுமின்றி தப்பித்த நிலையில், மதுசூதன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments