உத்தரப்பிரதேசம் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு; தாமாகவே விசாரணைக்கு ஏற்று உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

0 1758
உத்தரப்பிரதேசம் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு; தாமாகவே விசாரணைக்கு ஏற்று உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை தாமாகவே விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை மத்திய மாநில அரசுகளுக்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அனைத்துத் தரப்பினரும் அக்டோபர் 12ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் மனசாட்சியை உலுக்கி விட்டதாகவும் காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் அவசரமாக எரித்தது மிகுந்த வலியைத் தருவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் நீதிமன்றத்திற்கு அழைத்துள்ள நீதிபதிகள் எந்தவகையிலும் அந்த குடும்பத்திற்கு மிரட்டலோ அழுத்தமோ வலியுறுத்தலோ செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments