இந்திய ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகள் தயாரிக்க ஒப்பந்தம்

0 3024

இந்திய ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

நாக்பூரை சேர்ந்த எக்னாமிக் எக்பிளொசிவ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும், பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதத்தில், 409 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

டிஆர்டிஒ வடிவமைத்த கையெறி குண்டுகளை, எக்னாமிக் எக்பிளொசிவ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.  தற்காப்பு மற்றும் தாக்குதல் என பலவித பயன்பாட்டுக்கு ஏற்ற விதமாக கையெறி குண்டுகள் தயாரிக்கப்படுவதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments