போதைப் பொருள் தொடர்பான வழக்கு விவகாரம்; என்சிபி கண்காணிப்பு வளையத்தில் 3 இந்தி நடிகர்கள்

0 1324
இந்தி திரைப்பட நடிகைகளை தொடர்ந்து, இந்தி நடிகர்கள் 3 பேரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தனது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி திரைப்பட நடிகைகளை தொடர்ந்து, இந்தி நடிகர்கள் 3 பேரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தனது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விவகாரம் குறித்த விசாரணையில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த தகவல் கிடைத்ததால், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஏற்கெனவே நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர், ராகுல் பிரித்தி சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தி நடிகர்கள் 3 பேரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments