சென்னையில் ஆதரவாளர்களுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் 2வது நாளாக ஆலோசனை

0 5166
சென்னையில் ஆதரவாளர்களுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் 2வது நாளாக ஆலோசனை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் 2ஆவது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, வரும் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

2ஆவது நாளாக இன்றும் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பங்கேற்றுள்ள நத்தம் விசுவநாதன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நேற்று சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இதனிடையே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மட்டுமே வந்திருந்தனர். ஜெயலலிதாவின் நேரடி அரசியல் வாரிசு வாழ்க, கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் வாழ்க, எதிர்கால முதல்வர் வாழ்க என அவர்கள் கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர்.

இதனிடையே, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு புறப்பட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்த செய்தியாளர்களிடம், தேவைப்படும் போது  அழைப்பதாக கூறிவிட்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments