தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு-அமைச்சர் கடம்பூர் ராஜூ

0 1769

தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்ட பின், அதன்மீது ஆலோசித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓடிடி பிரச்னை குறித்த கேள்விக்கு, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பேசி சுமுக முடிவெடுக்க வேண்டும் என்றார்.

மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க முதலமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments