சுசாந்துடன் தாய்லாந்து சென்றதை சாரா அலிகான் ஒப்புக் கொண்டதாக தகவல்

0 5620

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்துடன் முன்பு விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்றதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ((என்சிபி)) இந்தி நடிகை சாரா அலிகான் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சுசாந்தின் மரணம்  குறித்து   விசாரணை நடத்தப்படும் நிலையில், அவரும் சாரா அலிகானும் கேதர்நாத் படத்தில் நடித்தபோது தொடர்பில் இருந்ததாக சுசாந்த் நண்பர் ஒருவர் கூறியிருந்தார். இதனிடையே, மும்பையில் போதை பொருள் தடுப்பு பிரிவினரின் விசாரணையில் சாரா நேற்று ஆஜரானார்.

அப்போது மும்பையிலுள்ள சுசாந்தின் இல்லத்துக்கும், லோனாவாலாவில் உள்ள பண்ணை வீட்டுக்கும் அடிக்கடி சென்றதாக சாரா  கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசாந்துக்கு போதைப் பொருள் பழக்கம் உண்டு எனவும், தனக்கு அந்த பழக்கமில்லை எனவும் அவர் கூறியதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments