முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்

0 3299
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார். அவரது மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார். அவரது மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1938ஆம் ஆண்டு ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் பிறந்த ஜஸ்வந்த் சிங் இந்திய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். பாஜகவில் தொடக்கக் காலம் முதலே இருந்து வந்த அவர் வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி ஆகிய அமைச்சகங்களுக்குப் பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றினார்.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதே ஆண்டின் ஆகஸ்டு ஏழாம் நாள் வீட்டில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு நினைவிழந்தார். அன்று முதல் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments