இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

0 1115
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

6 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்ததால் ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியதால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 835 புள்ளிகள் உயர்ந்து, 37 ஆயிரத்து 388ல் நிலை கொண்டது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 244 புள்ளிகள் அதிகரித்து, 11 ஆயிரத்து 50ல் நிலை பெற்றது. உலோகம், தகவல் தொழில்நுட்பம் துறை சார்ந்த பங்குகள் அதிக அளவில் விலை உயர்ந்தன.

அந்நியச் செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் உயர்ந்து, 73 ரூபாய் 61 காசுகளாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments