திருப்பதியில் கர்நாடக பக்தர்களுக்கான புதிய விடுதிக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அடிக்கல் நாட்டினர்

0 1613
திருப்பதியில் கர்நாடக மாநில பக்தர்களுக்காக 200 கோடியில் ஓய்வறை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயில் பின்பகுதியில் உள்ள கர்நாடக சத்திரம் பகுதியில் அந்த மாநில அரசின் சார்பில் பக்தர்களுக்காக 200 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் ஓய்வறை கட்ட முடிவு செய்யப்பட்டது.

திருப்பதியில் கர்நாடக மாநில பக்தர்களுக்காக 200 கோடியில் ஓய்வறை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயில் பின்பகுதியில் உள்ள கர்நாடக சத்திரம் பகுதியில் அந்த மாநில அரசின் சார்பில் பக்தர்களுக்காக 200 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் ஓய்வறை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பூமி பூஜையில்  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக இருவரும் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர்  உலக நன்மைக்காக நடைபெற்று வரும் சுந்தரகாண்ட பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து இருமாநில முதல்வர்களும், பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments