ஐபிஎல் : கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

0 1584
ஐபிஎல் : கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணியில், சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் சேர்க்க , அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 6 சிக்சர்களுடன் 80 ரன்களைக் குவித்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு, 195 ரன்களை குவித்தது.

தொடர்ந்து, களமிறங்கிய கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் 33 ரன்களும், தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதையடுத்து, அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது. ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments