போதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்

0 6925
போதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்

தனது மேலாளரிடம் போதைப் பொருள் கேட்டு முன்னணி நடிகை தீபிகா படுகோனே மேற்கொண்ட வாட்ஸ்ஆப் சாட்டிங் வெளியானதை தொடர்ந்து அவரை விசாரிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.  

இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் போதை பொருள் பயன்பாடு குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து சுஷாந்துக்கு போதைப் பொருள் வாங்கி கொடுத்ததாகவும், போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் அவரது காதலி ரியா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சரா அலி கான், ஷ்ரதா கபூர் ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் அவர்களுககு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியாவின் டேலன்ட் மேனேஜரான ஜெயா சாஹா என்பவர் தான் நடிகைகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்வதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜெயா சாஹாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது நடிகை தீபிகா படுகோன் அவரது மேலாளராக பணியாற்றி வரும் கரிஷ்மாவுடன் வாட்ஸ்ஆப்பில் நடத்திய உரையாடல் பதிவை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதில் கரிஷ்மாவிடம் போதைப் பொருள் இருக்கிறதா என தீபிகா கேட்பதும், அதற்கு தனது வீட்டில் அவை இருப்பதாகவும், ஆனால் தற்போது தாம் பாந்த்ராவில் இருப்பதாக கரிஷ்மா பதிலளிக்கும் விவரங்கள் உள்ளன.

மேலும் உடனடியாக வேண்டுமெனில் அமித் என்பவரிடம் கேட்பதாக கரிஷ்மா கூறுவதும், அதற்கு தீபிகா தயவு செய்து கேள் என பதில் கூறும் விவரங்களும் இருக்கின்றன.

இந்த வாட்ஸ்ஆப் உரையாடலின் அடிப்படையில் முதற்கட்டமாக நடிகை தீபிகாவின் மேலாளர் கரிஷ்வை விசாரணைக்கு வருமாறு அதிகாரிகள் அழைத்துள்ளனர்.

அவரிடம் விசாரணை முடிந்த பிறகு தீபிகா படுகோனுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக தீபிகா வலம் வருகிறார். இவர் ரஜினி மோசன் கேப்சர் முறையில் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆவார்.

மேலும் ஷாருக்கானுடன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ் எனும் படத்தில் நடித்த தீபிகா, அப்படத்தின் லுங்கி டான்ஸ் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகம் ஆனவர்.

போதைப் பொருள் விவகாரத்தில் தீபிகா படுகோனே பெயர் அடிபடுவதை கொண்டு அவரை இன்னொரு இந்தி நடிகை கங்கனா ரணாவத் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மன அழுத்தம் தொடர்பாக தீபிகா படுகோனே ரீப்பிட் ஆப்டர் மீ என விழிப்புணர்வு மேற்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ள கங்கனா, போதைப் பொருள் பயன்படுத்தியதால்தான் அவர் மன அழுத்தத்துக்கு ஆளானதாக கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments