கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு : காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

0 2083
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு : காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருவதால் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 37 ஆயிரத்து கன அடியும் நேற்று உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. எனவே ஒகேனக்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments