இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளத்தை துவங்கும் ஆப்பிள் நிறுவனம்

0 1822
இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளத்தை துவங்கும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆன்லைன் விற்பனை தளத்தை வரும் செப்டம்பர் 23ம் தேதியன்று துவங்கவுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டிம் குக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் ஆன்லைன் ஸ்டோர் மூலமே ஆர்டர் செய்து பெற முடியும்.

இந்தியாவில் ஏற்கனவே அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், தீபாவளிக்கு முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த ஆன்லைன் விற்பனை தளத்தை இந்தியாவில் துவங்கவிருப்பதாக புளூம்பெர்க் இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை தற்போது டிம் குக் தனது பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments