தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான நிலம் 6 மாதங்களில் கையகப்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

0 3248

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலத்தை 6 மாதத்தில் தமிழக அரசு ஒப்படைக்கும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், விண்வெளித்துறையின் வேண்டுகோளை ஏற்று, ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் 961 ஹெக்டேர் நிலத்தை அடையாளம் கண்டறிந்துள்ளது என்றார்.

இன்னும் 6 மாத காலத்துக்குள் அந்த நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

961 ஹெக்டேர் நிலத்தில், 431 ஹெக்டேர் நிலத்தில் அளவிடும் பணி முடிவடைந்து விட்டது என்றும் மீதி நிலத்துக்கு அளவிடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments