பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27ந் தேதி சசிகலா விடுதலையாகிறார்

0 6281
பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27ந் தேதி சசிகலா விடுதலையாகிறார்

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையாவார் என பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், கடந்த 2017 பிப்ரவரி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2017 பிப்ரவரி 14ம் தேதி தண்டனை உறுதியான நாள் என்பதால், 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து 2021ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி சசிகலா உள்ளிட்டோர் விடுதலையாவார்கள் என கணிக்கப்பட்டது. ஆனால் இவ்வழக்குக்காக மூவரும் முன்பே 21 நாள் சிறையிலிருந்ததால், அந்த நாட்களையும் கழித்து விட்டு 2021 ஜனவரி இறுதியில் விடுதலை செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, பரப்பன அக்ரஹாரா சிறையின், முதன்மை சிறை கண்காணிப்பாளர் அளித்துள்ள பதிலில், 2021 ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு தண்டனையை நீட்டித்து, 2022 பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலை செய்யப்படுவார் என்றும், சிறையில் இருந்த காலத்தில் பரோலில் வெளியில் சென்றிருந்தால் விடுதலையாகும் தேதி மாறுபடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments