மாநிலங்களவை துணை தலைவராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு

0 3148
நாடாளுமன்ற மாநிலங்களவையின் துணைத்தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்பி ஹரிவன்ஸ் நாராயண் சிங் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையின் துணைத்தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்பி ஹரிவன்ஸ் நாராயண் சிங் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்த பதவிக்கு பா.ஜ.க கூட்டணியின் சார்பில் ஹரிவன்சும், எதிர்க்கட்சி கூட்டணியின் சார்பில் பீகார் மாநில எம்.பி, மனோஜ் ஷாவும் போட்டியிட்டனர். குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில், ஹரிவன்ஸ் வெற்றி பெற்றதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.

மாநிலங்களை துணை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments