ஓடிடி விவகாரம் : திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரே அடாவடி- பாரதி ராஜா

0 4819
திரைப்பட ரிலீஸ் விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரே அடாவடியாக செயல்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

திரைப்பட ரிலீஸ் விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரே அடாவடியாக செயல்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் தமிழ்திரைப்பட  தயாரிப்பாளர் சங்க புதிய அலுவலகத்தை  திறந்து வைத்தபின்  செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜாவிடம், ஓடிடியில் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டால், ஐபிஎல் மேட்ச் ஒளிபரப்ப வேண்டிய நிலையும்,   

திருமண மண்டபங்களாக மாற்ற வேண்டிய நிலையும் ஏற்படுமென திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர்,  படத் தயாரிப்பாளர்களுக்கே அதை எங்கு ரிலீஸ் செய்ய வேண்டுமென முடிவெடுக்கும் உரிமை இருப்பதாகவும், இதில் யாரையும் கட்டாயபடுத்த முடியாது எனவும் கூறினார். திரையரங்குகளை திருமண மண்டபங்களாக மாற்றினாலும் கவலையில்லை எனவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments