வழக்குளை காணொலியில் நடத்த 94 சதவீதம் டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் விருப்பம்

0 908
வழக்குளை காணொலியில் நடத்த 94 சதவீதம் டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் விருப்பம்

நீதிமன்றத்தில் நேரடியாக வந்து வழக்குளை நடத்துவதற்கு பதிலாக காணொலியில் நடத்த வேண்டும் என டெல்லி உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களில் 94 சதவிகிதம் பேர் விருப்பம்  தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து  கடந்த 1 ஆம் தேதி முதல் டெல்லி உயர் நீதிமன்றம், மற்றும் இதர நீதிமன்றங்களில் வழக்கமான விசாரணை நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் ஒன்று முதல் 10 ஆம் தேதி வரையிலான காலத்தில்  13 சதவிகித வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்த தகவல் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற விசாரணை அறைகளை 5 ல் 3 ஆக டெல்லி உயர் நீதிமன்றம் குறைத்துள்ளது. 

அதைப் போன்று டெல்லி நகர நீதிமன்றங்களிலும், கடந்த 10 நாட்களாக 13 சதவிகித வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றங்களுக்கு  வந்தனர்.

உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை, ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, சுமார் ஒரு சதவிகித வழக்கறிஞர்கள் மட்டுமே நேரடி விசாரணைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments